Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th March 2023 20:20:57 Hours

தர உத்தரவாதம் மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைகள் பொறுப்பேற்பு

இலங்கை சிங்கப் படையணியின் பிரிகேடியர் சுஜீவ பெரேரா, அவர்கள் திங்கட்கிழமை (13) நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது இராணுவத் தலைமையகத்தில் தர உத்தரவாதம் மற்றும் ஆய்வுப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார்.

இதற்கு முன் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த திஸாநாயக்க அவர்கள் இப்போது மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அலுவலகத்திற்கு வந்த பிரிகேடியர் சுஜீவ பெரேரா அவர்கள் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்த நியமனத்திற்கு முன்னர், பிரிகேடியர் சுஜீவ பெரேரா அவர்கள் 591 வது காலாட் பிரிகேட் தளபதியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது புதிய அலுவலக பொறுப்பேற்கும் நிகழ்வில் தர உத்தரவாதம் மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.