21st August 2021 18:00:36 Hours
பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர பாதுகாப்புத் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை இராணுவப் படையினர் இன்று அதிகாலை (21) முதல் பொலிஸாருடன் இணைந்து நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி படையினரால் வீதித்டைகள், ரோந்து ரோந்து நடவடிக்க்கள் மற்றும் விரைவு எதிர் நடவடிக்கை குழுக்கள் ஊடாக அந்தந்த பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகள், படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் மேற்பார்வையில் குறித்தப் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
இதே வேளை இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடமாடும் தடுப்பூசி வழங்கல் திட்டங்கள் மற்றும் பிற தடுப்பூசி மையங்கள் நாடு முழுவதும் தடுப்பூசி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.