24th July 2021 15:30:42 Hours
இன்று காலை (26) இலங்கையில் 1,666 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 1,656 நபர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபடியாக கொழும்பு மாவட்டத்தில் 360 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், கம்பஹா மாவட்டத்தில் 256 பேரும் காலி மாவட்டத்தில் 172 பேரும் பதிவாகியுள்ளனர். மீதி 868 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவுவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை (26) வரை இலங்கையில் மொத்தம் 296,515 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 187,183 பேர் புத்தாண்டுக்குப் பின்னர் இணங்காணப்பட்டவர்கள்.
இன்று (26) அதிகாலை 0600 மணி வரை 937 பேர் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று (26) ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 64 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,655 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று (26) அதிகாலை 0600 மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) 405 பேர் 10 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நிறைவின் பின் வீடு திரும்பினர்.
ஜூலை (24) ம் திகதி வரை இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆகும் அவர்களில் 22 பெண்களும் 23 ஆண்களும் உள்ளடங்குவர்.
இன்று (26) காலை முதல் கேகாலை மாவட்டத்தின் கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலவிட்ட கிராம சேவகர் பிரிவின் கோலிந்தவத்த, இரத்தினபுரி மாவட்டத்தின் பரகல கிராம சேவையாளர் பிரிவும் , காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரணகொலணிய கிராமசேவகர் பிரிவின் திவிதுருவத்த, முல்லைத்தீவு நாயாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மலை கிழக்கு மீன்பிடி பகுதி மற்றும் மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலஹித கிராம சேவகர் பிரிவின் நக்கலவத்த மற்றும் மில்லகெலேவத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.