Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2020 08:15:35 Hours

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிலிருந்து 93 நபர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

மூன்று வார காலமாக இராணுவத்தினரால் பராமரித்து வரும் கல்கந்த மற்றும் கடுகெலிய தனிமைப்படுத்தும் மையங்களிலிருந்து 93 நபர்கள் கடந்த ஏப்ரல் மாதம் (30) ஆம் திகதி சுகாதார சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நபர்களில் 38பேர் முதியோர்கள் காணப்பட்டதுடன் இவர்களுக்கு சாரம் மற்றும் டிசேட்டுகள் தண்ணீர் போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவர்கள் இந்த மையங்களிலிருந்து செல்லும் போது படைத் தளபதிகள் இந்த நிலையங்களுக்கு வருகை தந்து இவர்களை வழியனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த நபர்கள் இராணுவத்தின் போக்குவரத்து வசதிகளுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Sport media | nike