24th March 2020 11:00:52 Hours
பூனானை(203) மற்றும் கண்டக்காடு(108) ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்களில் இரண்டு வார கால மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்த 311 பேர் மருத்துவ பரிசோதனை சான்றிதல்களுடன் இன்று காலை 24 ஆம் திகதி வெளியேறினர்.
காலி,கொழும்பு,கண்டி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள குறித்த குழுவினருக்கு தங்களுடைய வசிப்பிட பிரதேசங்களுக்கு அமைவாக வெவ்வேறாக போக்குவரத்து வசதிகளானது வழங்கப்பட்டுள்ளன. அதற்குமேலதிகமாக படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்ணான்டோ, 23ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்து கொண்ட அவர்களை வழியனுப்பும் போது கலந்து கொண்டனர். Nike footwear | Autres