Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th April 2024 17:31:21 Hours

சேருவாவிலவில் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு எல்.பி. 07 தெஹிவத்த சேருவாவிலவை சேர்ந்த திருமதி மல்லிகா சந்திரலதா என்பவருக்குப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இலங்கை விஜயபாகு காலாட் படையணியின் 9 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 03 மாத காலத்திற்குள் நிர்மாணப்பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 222 வது காலாட் பிரிகேட் பிரிவின் தளபதி ஆகியோர் இத் திட்டத்தினை மேற்பார்வையிட்டதுடன் திரு.சிந்திகா அபேரத்ன அவர்கள் இத்திட்டதிற்கு தேவையான நிதி உதவிகளை வழங்கினார்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் நிதி உதவியாளர்களான திரு.சிந்திக அபேரத்ன மற்றும் திரு.பாத்திய ஜெயக்கொடி மற்றும் பிரதேசத்தின் மக்கள் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.