Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2019 17:04:16 Hours

சூழல் பாதுகாப்பு எனும் தலைப்பில் வன்னி படையினரால் எலுமிச்சை மரக்கன்றுகள் நடல்

வன ரோப எனும் சூழல் பாதுகாப்பு திட்டத்திற்கு அமைவாக துருமுவென் அபி எனும் எண்ணக்கருவிற்கமைய பரிசர புரருதானய எனும் தலைப்பில் பலவாறான மர நடுகைத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படும் இராணுவ படையணி வளாகங்களில் நடப்பட்டது. இதற்கமைவய வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் மர நடுகைத் திட்டமானது வியாழக் கிழமை (07) மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய இப் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் 100ற்கும் மே;றபட்ட எலுமிச்சை மரக் கன்றுகள் நடப்பட்டன.

இதன் போது இப் படைத் தலைமையகத்தின் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியான பிரிகேடியர்; ஹரேந்திர ரணசிங்க அவர்களால் முதல் மரக் கன்றானது இப் படைத் தலைமையக வளாகத்தில் நடப்பட்டது.

மேலும் இவ்வாறு நடப்பட்ட மரக் கன்றுகள் மிக அவதானத்துடன் கண்காணிக்கப்பட்டு பரமாரிப்புடன் காணப்படுகின்றது. Sports News | Shop: Nike