25th August 2023 20:28:34 Hours
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் திரு.ஒலிவர் பிரஸ் மற்றும் முதல் செயலாளர் (அரசியல்) திரு. ஜஸ்டின் பொயில்லியட் ஆகியோர் புதன்கிழமை (2023 ஓகஸ்ட் 23) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்கேஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் தூதுக்குழுவினர் வரவேற்கப்பட்டனர். அதன் பின்னர் நல்லிணக்கம், அபிவிருத்தி, விவசாயம், பாதுகாப்பு மற்றும் ஏனையவற்றிற்கு விசேட கவனம் செலுத்தி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
சந்திப்பின் முடிவில், நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக்களையும் பதிவிட்டனர். இந்த சந்திப்பின் போது யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி அவர்களும் அதிகாரிகளும் உடனிருந்தார்.