28th December 2021 08:15:07 Hours
68 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் சுதந்திபுரம் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிருஸ்துமஸ் கற்றல் உபகரண பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (25) இடம் பெற்றது.
சுதந்திபுரத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடன் 681 வது பிரிகேட்டின் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் (SLNG) படையினர் குறித்த நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, நன்கொடையாளர் திரு டபில்யுஎம்சியூ பத்பெரிய அவர்கள் புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களுக்கான தனது அனுசரணையினை வழங்கியதுடன் இந்த நிகழ்வில் 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி, 9 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபில்யுசிடிடி குமார, 6 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்ஆர் ஹென்னிநாயக்க, 06 அதிகாரிகள் மற்றும் 25 சிப்பாய்கள் இந்த நிகழ்வினை சுமுகமாக நடத்துவதற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.
இந்த நிகழ்வு சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இடம்பெற்றது.