Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2019 13:18:29 Hours

சாலியபுரையில் இராணுவ தளபதிக்கு கௌரவ வரவேற்பு மரியாதை

இலங்கை இராணுவத்தில் 23 ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு அவரது படையணியான கஜபா படையணி தலைமையகத்தில் இம் மாதம் (31) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு இராணுவ உயரதிகாரிகள், அவர்களது பாரியார்கள் நாட்டிற்காக உயிர்களை தியாகம் செய்த இராணுவத்தினரது உறவினர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிக் கொண்டனர். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தேசத்தின் பாதுகாப்பின் நிமித்தம் பாரிய பங்கேற்பை வழங்கிய படையணியாக இந்த படையணி விளங்கி நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளது.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை கஜபா படையணியின் பிரதி மத்திய கட்டளை தளபதி லெப்டினன்ட் கேர்ணல் பீ பெர்ணாண்டோ அவர்கள் வரவேற்றார். பின்பு இராணுவ தளபதிக்கு படையணியினரால் இராணுவ கௌரவ அணிவகுப்பு மரியாதை வழங்கி தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டார்.

தலைமையபத்திற்கு வருகை தந்து முதலில் முன்னாள் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களது நினைவு தூபி வளாகத்திற்கு சென்று இராணுவ கௌரவ மரியாதையை செலுத்தினார். பின்பு தலைமையகத்தினுள் உள்ள கொடி கம்பத்தில் கஜபா படையணியின் கொடிகளை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். கஜபா படையணியில் இராணுவ தளபதியாக பதவியேற்ற முதல் அதிகாரி இவராவார்.

தலைமையகத்தில் உள்ள படையினர் மத்தியில் இராணுவ தளபதி உரையையும் நிகழ்த்தினார். பின்பு தலைமையக வளாகத்தினுள் மரநடுகை தளபதியினால் மேற்கொள்ளப்பட்டு படையினரை சந்தித்து அவர்களது நலன்களை விசாரித்து உரையாடினார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அலுவலகத்தின் பதவி நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்களும் , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டார். Sport media | Air Jordan Release Dates Calendar