Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2023 19:40:09 Hours

சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கேணல் என்ஏஎஸ்சி பெரேரா அவர்கள் மே 17 அன்று பனாகொடை இராணுவ வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.

பணிப்பகத்தின் பல அதிகாரிகள் முன்னிலையில் மகா சங்க உறுப்பினர்களின் ‘செத் பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இட்டு தனது அலுவலகத்தை ஏற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னர் இந்த நியமனத்தில் கடமையாற்றிய பிரிகேடியர் ஏஎம்கேஜிபீஎஸ்கே அபேசிங்க அவர்கள் தற்போது பாதியீடு மற்றும் நிதி பணிப்பகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.