23rd October 2021 15:15:16 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 54 வது படைப்பிரிவின் 542 வது பிரிகேட்டின் 15 வது (தொண்) கெமுனு ஹேவா படையினர் (GW) ஞாயிற்றுக்கிழமை (24) வவுனியா, குஞ்சிக்குளம் பகுதியில் உள்ள வீதித் தடையில் மேற்கொண்ட சோதனையின் போது கடத்தல் மஞ்சள் 1200 கிலோகிராம் கைப்பற்றப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தல் பொருட்களின் சந்தை பெறுமதி 7.2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை படையினாரால் போதைப்பொருள் மற்றும் கடத்தல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு தங்கள் முழு ஒத்துழைப்பையும் செலுத்தி, கடந்த காலங்களில் மன்னார் மற்றும் பிற இடங்களில் இருந்து போதைப்பொருள், கடத்தல் மஞ்சள் மற்றும் வேறு கடத்தல் பொருட்களை மீட்டெடுத்துள்ளனர். இவை தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.