Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2021 19:27:52 Hours

கொவிட் தொற்றுக்கு உட்படும் பௌத்த துறவிகளுக்காக இடைநிலை பராமரிப்பு நிலையம் அமைப்பதில் படைமயினர்

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை இராணுவத்தினர் கொழும்பு சர்வதேச விபாசன தியான மையத்தை நாட்டில் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகும் பௌத்த பிக்குகளுக்கான முதலாவது இடைநிலை பராமரிப்பு நிலையமாக (ஐசிசி) அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச விபாசன தியான மையத்தின் தலைமை தேரர் வண. உடுமும்பர காஷ்யப தேரர் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் விடுத்த வேண்டு கோளிற்கு இணங்க இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கான் அனைத்து அத்தியாவசியங்களையும் வழங்கும் பொறுப்பை திருமதி சுஜீவா நெல்சன் தலைமையிலான இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஏற்றுள்ளது.

இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்தகம் மற்றும் தனி தீவிர சிகிச்சை பிரிவு என 84 துறவிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான 45 அறைகளை கொண்டது.

திருமதி சுஜீவா நெல்சன், 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, இராணுவ சேவை வனிதையர் பிரிவு பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் துஷார பாலசூரிய, மற்றும் சில அதிகாரிகள் புதன்கிழமை (25) அதன் ஏற்பாடுகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காக குறித்த இடத்திற்கு விஜயம் செய்தனர்.