Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2025 16:03:20 Hours

கொழும்பு விசாகா வித்யாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2025 மே 02, அன்று பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவ சிப்பாய் குழுவினரின் அணிவகுப்புடன் நிகழ்வு ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியான அஞ்சல் ஓட்ட போட்டிகள் நடைபெற்றன. பதக்கங்கள் வழங்கும் விழாவின் போது, சிறந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் சாதனைகளுக்காக பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றனர்.

விசாகா வித்யாலயத்தின் அதிபர் திருமதி மனோமி செனவிரத்ன, ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.