Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2025 16:03:32 Hours

கொழும்பு இராணுவ மருத்துவமனை ஊழியர்களுக்கு இராணுவத் தளபதி உரை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 30 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனை ஊழியர்களுக்கு உரை நிகழ்த்தினார்.

தூய இலங்கை திட்டத்தின் கீழ், இராணுவத் தளபதி மருத்துவமனைக்குச் சென்று, பணியாற்றும், ஓய்வு பெற்ற, ஊனமுற்ற, போரில் கொல்லப்பட்ட மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக பணியாளர்களுக்கு உரையாற்றினார்.

வருகை தந்த இராணுவத் தளபதியை, இராணுவ சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் டபிள்யூஎச்யூடி விஜேரத்ன அவர்களுடன் கொழும்பு இராணுவ மருத்துவமனையின் பணிப்பாளர் பிரிகேடியர் டீகேஎஸ்எஸ் தொடங்கொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.

இதன் போது உரையாற்றிய இராணுவத் தளபதி, மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவம் அல்லாத பணியாளர்கள் மற்றும் சிவில் நிர்வாக ஊழியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவாக சிறந்த சேவை வழங்கியதற்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இராணுவ சுகாதாரத்தில் உயர் தரங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார், மேலும் படையினரின் தயார்நிலை மற்றும் ஒட்டுமொத்த படையின் நலனை நிலைநிறுத்துவதில் மருத்துவ நிபுணர்கள் ஆற்றிய முக்கிய பங்கை இராணுவம் அங்கீகரிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும், செயல்பாட்டு மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக ஊழியர்கள் தெரிவித்த கருத்துகளையும் இராணுவத் தளபதி செவிமடுத்தார். அவர்களின் பிரச்சினைகளை உடனடியாகவும் திறமையாகவும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அவர்களுக்கு உறுதியளித்தார்.

உரையைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தின் பல வார்டுகளை இராணுவத் தளபதி பார்வையிட்டதுடன், பணியாளர்களுடன் உரையாடிய அவர் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார நடைமுறைகளைக் கண்காணித்தார்.

இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.