Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கொடைகாமம் பிரதேசத்தில் படையினரால் மூக்குக் கண்ணாடிகள் பகிர்ந்தளிப்பு

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினன் ஒருங்கிணைப்போடு மீண்டுமோர் சமூக நலன்புரிச் சேவை முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் மல்வத்து மஹா விகாரையின் சுசரண லங்கா எனும் சமூக நலன்புரித் திட்டத்தின் மூலம் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் இத் திட்டமானது யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் ஆசீர்வாதத்துடன் இடம் பெற்றது.

இத் திட்டமானது 522ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கமல் பின்னவெல அவர்களின் பழிகாட்டலின் கீழ் 15ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் அவர்களது ஒருங்கிணைப்பில் சுசரண லங்கா திட்டத்தின் வைத்திய அதிகாரிகளின் பங்களிப்போடு பொது மக்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் 522ஆவது படைப் பிரிவினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (07) 23 மூக்குக் கண்ணாடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 522ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கலமல் பின்னவெல அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் சுசரண லங்கா திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

jordan release date | Sneaker & Lifestyle News