Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2021 20:33:07 Hours

கெமுனு ஹேவா படையணியின் புதிய படைத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இராணுவ பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 23 ஒக்டோபர் 2021 மத அனுட்டானங்களுடன் குருவிட்டவில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் 20 வது கெமுனு ஹேவா படையணி படைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

படையணி தலைமையத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களை கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதி வரவேற்றார். அதனையடுத்து இராணுவ மரபுகளுக்கமைய படையினரால் வளாக நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு சதுக்கத்தில் மரியாதை அணிவகுப்பு என்பன வழங்கப்பட்டன.

இராணுவ மரபுகளுக்கமைவான மரியாதைகளை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து தளபதியால் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களிலும் அவர் கையொப்பமிட்டார்.

அதனை தொடர்ந்து நீச்சல் தடாக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசார நிகழ்வில் பங்கெடுத்த மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, சிப்பாய்களுக்கான உரையை நிகழ்த்திய பின்னர் கட்டளை அதிகாரிகளுடான சபைக் கூட்டத்திலும் பங்கெடுத்தார்.