Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கூடைப்பந்து சாம்பியன்ஷிப் விருது வழங்கும் விழா -2018

24வது படைப்பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட 2018 ஆண்டுக்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் விருது வழங்கும் விழா கடந்த வியாழக் கிழமை (28) ஆம் திகதி மாலை கராத்தீவுட விபுலானந்த மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

24வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹந்த முடலிகெ அவர்களின் வேண்டுகோளிற்கமைய கிழக்கு இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

22 மற்றும் 24 ஆம் படைப்பிவுகளுக்கிடையே இடம்பெற்ற இப் போட்டியின் வெற்றியாளராக 24 படைப்பிரிவு தொடரச்சியாக மூன்றாம் தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் 16 இலங்கை தேசிய படையணியைச் சேர்ந்த லெப்டினன் பி.சி.கே. ரணவீர அவர்கள் இப் போட்டியின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டு பிரதம அதிதியினால் சான்றிதல்கள் வழங்கப்பட்டன.

24 படைப்பிரிவின் கீழுள்ள அனைத்து கட்டளை படையகம், சி.டி..எஸ் அம்பார, மற்றும் விபுலானந்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இப்போட்டி இடம்பெற்றது. Nike air jordan Sneakers | THE SNEAKER BULLETIN