09th February 2024 14:02:16 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சிப் பாடசாலையில் ஆட்சேர்ப்பு பயிற்சிப் பாடநெறி – 108 க்கான விளையாட்டுப் போட்டி 03 பெப்ரவரி 2024 ம் திகதி காலி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி லெப்டினன் கேணல் எச்எடிவீகே அலெக்சாண்டர் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
விளையாட்டுப் போட்டியின் போது பாடநெறி பங்கேற்பாளர்கள் தங்களது சிறந்த விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தினர். இந்த அற்புதமான நிகழ்வைக் காண சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.