Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th May 2020 17:15:33 Hours

குணமடைந்த 121 கடற்படையினர் தங்களது வீடுகளுக்கு செல்லல்-நொப்கோ தெரிவிப்பு

மாலைதீவில் இருந்து 283 பேர் இன்று 14 ஆம் திகதி காலை இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் பூனானை (98), மங்கி பிரிஜ் (153), பெரியகாடு (111), ஹோட்டல் டொல்பின் (27), அம்பாறை(65), லைசியம் குருநாகல(62), மற்றும் கடற்படை குடும்ப தனிமைப்படுத்தல் மையம் (170) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 686 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று 14 ஆம் திகதி தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். இன்று 14 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 8846 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தற்பொழுது நாடுபூராகவுமுள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 37 தனிமைப்படுத்தல் மையங்களில் 2987 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அதனடிப்படையில் இன்று 14 ஆம் திகதியுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 465 ஆகும், அவர்களில் குணமடைந்த 121 பேர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொற்றுக்குள்ளான 344 கடற்படை வீரர்கள் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றன்ர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் –8846

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -2987

தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 37 bridgemedia | Nike Air Max 270