20th August 2023 20:32:41 Hours
மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக பதவியேற்றதன் பின்னர் புதன்கிழமை (ஓகஸ்ட் 16) 23 வது காலாட் படைப்பிரிவிக்கான விஜயத்துடன் தொடர்புடைய தனது பயணத்தின் போது புனானியில் உள்ள பிராந்திய போர்கருவிகள் களஞ்சியம் வளாகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கும் விஜயம் செய்தார்.
முதலாவதாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி புனானியில் உள்ள பிராந்திய போர்கருவிகள் களஞ்சிய வளாகத்திற்கு விஜயம் செய்துடன், தளபதியை பிராந்திய போர்கருவிகள் களஞ்சிய வளாக தளபதி கேணல் பிஏஎஸ்எஸ்டி புலத்கம அவர்கள் அன்புடன் வரவேற்றார். மேலும், அவர் பிராந்திய போர்கருவிகள் கடை வளாகபற்றிய விளக்கத்தைப் பெற்றார். பின்னர் தளபதி ஒரு மாங்கன்றினை நட்டு பிராந்திய போர்கருவிகள் கடை வளாக ஊழியர்களுடன் குழு படம் எடுத்தகொண்டார். சிறிது நேரம் கழித்து, அவர் தளபதியுடன் வளாகத்தின் முகாம் வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டார். வளாகத்திலிருந்து புறப்படுவதற்கு முன், தளபதி பிராந்திய போர்கருவிகள் கடை வளாகவிருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில எண்ணங்களையும் பாராட்டுக்களையும் பதிவிட்டார்.
பின்னர், அன்றைய தினம் மாலை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு தளபதி விஜயம் செய்தார். சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டப்ளியுஎம்எச்ஈ ரத்நாயக்க டப்ளியுடப்ளியுவீஆர்டப்ள்யுபீஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை வரவேற்றார். தொடர்ந்து தளபதி அங்கு சிகிச்சை பெறுபவர்களுடன் அவர் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, 23 வது காலாட் படைப்பிரிவின் பிரதேச பணிநிலை அதிகாரிகள்,சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் அந்த விஜயங்களில் கலந்துகொண்டனர்.