Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th April 2024 17:25:50 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் சேவைக்கு இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பாராட்டு

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவரது பணியை பாராட்டி, இலங்கை மெதடிஸ்த திருச்சபை, 11 ஏப்ரல் 2024 அன்று கல்முனை மெதடிஸ்த தேவாலயத்தில் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்தந்தை எப்பனிசர் ஜோசப் ஆண்டகை அவர்களின் ஒருங்கிணைப்புடன் மெதடிஸ்த திருச்சபையால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வின் போது கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் ஆற்றிய பங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. வாழ்த்து உரையை ஆற்றிய ஆயர், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதியின் கருத்தியல் அமைப்பில் செயல்படுத்தப்பட்ட “மொழி மூலம் நல்லிணக்கம்” என்ற உன்னதத் திட்டத்தைப் பெரிதும் பாராட்டினார்.

மேலும், இத்திட்டமானது சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் மற்றொரு மொழியையும் கலாசாரத்தையும் கற்கவும் மதிக்கவும் உதவ வழிக்காட்டியாக அமைந்தது. திருச்சபையின் தலைவர் அவருடைய மனிதாபிமானப் பண்புகளையும், ஒரே தேசமாக ஒன்றாக நிற்க வேண்டும் என்ற வலுவான கருத்தையும் பாராட்டினார். அவரது அளப்பரிய சேவைகளைப் பாராட்டி நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ சீடர்கள் மற்றும் பிரதேசத்தின் சிவில் அழைப்பாளர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.