Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2023 00:24:48 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதி பதவியேற்பு

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதியாக இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 14) வெலிகந்தவில் உள்ள கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.

புதிய கிழக்குத் தளபதி பிரதான நுழைவாயிலுக்கு வருகை தந்தவுடன் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஏஎச்டி ஆரியசேன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் அன்புடன் வரவேற்றதுடன், அவரை கௌரவிக்கும் வகையில் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் வழங்கப்பட்ட கெளரவ அணிவகுப்பு மரியாதையினையும் பெற்றுக் கொண்டார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, மத சடங்குகள் மற்றும் சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் 'மகா சங்க' உறுப்பினர்களின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அடையாளமாக தனது கையொப்பத்தை இட்டு தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அந்நாளின் நினைவாக கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதியினால் தலைமையக வளாகத்தில் மரக்கன்று நடப்படுவதற்கு முன்னர் சில குழு படங்கள் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதிய கிழக்குத் தளபதியினால் படையினருக்கு உரை நிகழ்த்தப்பட்டது. அன்றைய நிகழ்ச்சி நிரலின் முடிவில், சிப்பாய் உணவகத்தில் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துசாரத்தின் போது அவர் படையினருடன் உரையாடினார்.

22, 23 மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தளபதி, பிரிகேட் தளபதிகள் கட்டளை அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.