Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th April 2024 16:49:49 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் மொல்லிப்பொத்தனையில் ஒரு புதிய வீடு நிர்மாணிப்பு

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களால் வீடு நிர்மாணிப்பு திட்டத்தினை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அமைய 11 ஏப்ரல் 2024 அன்று மொல்லிப்பொத்தானை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் தகுதியான குடும்பத்திற்கு வீட்டை கையளித்தார்.

இவ் வீடமைப்பு திட்டம் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யு.பி. குணரத்ன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ என்டியூ ஐஜீ அவர்களின் கருத்தியல் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. 223 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 15 வது இலேசாயுத காலாட் படையணி படையினரால் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக தமது மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் வழங்கப்பட்டன.

பிரபல பாடகர் திரு.பாத்திய ஜெயக்கொடி அவர்களின் நிதி உதவியுடன் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் ஒருங்கிணைப்புடன் பயனாளி எச்ஏஏசி தினேஸ் குமார அவர்களுக்கு இவ்வீடு வழங்கப்பட்டது.

223 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் வைஎச்பீ ரங்கஜீவ யூஎஸ்பீ, 15 வது இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினட் என்சி மாரசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், திரு.பாத்திய ஜெயக்கொடி மற்றும் கிராம மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.