18th August 2023 13:00:27 Hours
புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் புதன்கிழமை (ஓகஸ்ட் 16) புனானி 23 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து 9 வது இலங்கை பீரங்கி படையணியினரால் நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
நிகழ்வின் நினைவாக படைப்பிரிவு ஊழியர்களுடன் குழு படம் எடுப்பதற்கு முன் வளாகத்தில் மாங் கன்று ஒன்றை நட்டுவைத்த அவர் 23 காலாட் படைப்பிரிவின் படையினருக்கு உரையாற்றினார்.
பின்னர் 23 காலாட் படைப்பிரிவின் தளபதியால் படைப்பிரிவின் பங்கு மற்றும் பணிகள் மற்றும் அதன் பொறுப்புகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அவர் செல்வதற்கு முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுகளை பதிவிட்டார்.
அதேவேளை, கிழக்கு தளபதி ஓட்டமாவடி மற்றும் புனானி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கொவிட் 19 புதைகுழியையும் விஜயத்தின் போது பார்வையிட்டார். 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 231 வது காலாட் பிரிகேட் தளபதி, படைப்பிரிவு பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.