Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th April 2024 16:52:31 Hours

கிழக்கு தளபதியினால் விவசாய முன்னேற்றத்திற்கான பசுமை இல்ல திட்டம் ஆரம்பிப்பு

கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் விவசாய அறிவை மேம்படுத்தும் வகையில் 15 ஏப்ரல் 2024 அன்று பசுமை இல்ல விவசாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது கடும் காலநிலையின் விளைவுகளைத் தணிக்க உலர் வலயங்களில் பசுமை இல்லங்களின் முக்கியத்துவத்தை தளபதி எடுத்துரைத்தார். மகாவலி பி வலய பிராந்திய திட்ட முகாமையாளர் திரு. சுகத் வீரசிங்கவின் ஆதரவுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் 23 ஆவது காலாட் படைபிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.