Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2021 20:38:03 Hours

கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதியின் நிலை உயர்விற்கு வாழ்த்து

கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதியான மேஜர் ஜெனரல் நிலம் ஹேரத் அவர்கள் அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வு பெற்றமையை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (10) முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தலைமையகத்திற்குத் திரும்பியபோது அவருக்கு படையினரால் பாராட்டு விழாவை நடத்தினர்.

குறித்த நிகழ்வில் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிநடை மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை என்பன 7 வது இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினரால் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விருந்துபசாரத்தில் கலந்துக் கொண்ட தளபதி தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.

கேணல் முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசம், பணிநிலை அதிகாரிகள், 11வது பொறியியலாளர் சேவை படை, 7 வது இலங்கை இராணுவ சேவைப் படை, 6 வது இலங்கை இராணுவ போர்கருவிகள் படை, 7 வத இலங்கை இயந்திர பொறியியல் படை, 5 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.