Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2021 10:40:37 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படையின் நினைவுச்சின்னங்கள் காட்சிக்கு

நெருக்கடியான காலங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட கிளிநொச்சி முதலாவது படையணி தலைமையக அருங்காட்சியகத்தில் முந்தைய கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் சின்னங்கள் மற்றும் பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

முந்தைய தலைமையகத்தின் நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பெறுமதி அளிக்கும் புதிய அருங்காட்சியம் முதலாவது படையணி தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களால் புதன்கிழமை (1) எளிமையான நிகழ்வின் முலம் திறந்து வைக்கப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தின் உச்சக்கட்டத்தின் போது முக்கிய பங்காற்றிய கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக நினைவுகள் இப்போது முதலாவது படையணி தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவினை குறிக்கும் நிகழ்வில் முதலாவது படைப்பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். இந்த அருங்காட்சியகத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புகைப்படங்கள் மற்றும் பல நினைவுப் பொருட்கள் உள்ளன.

முதலாவது படையணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் அதிநவீன நிர்மாணத்தை 9 வது கள இலங்கை பொறியியல் படையணி மற்றும் 11 வது பொறியியல் சேவைகள் படையினர் நிறைவு செய்தனர். தற்போதுள்ள சுகாதார நெறிமுறைகளுக்கு இணங்க இந்த நிகழ்வு இடம்பெற்றது.