Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் கிரிகெட் போட்டி

கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர்களிடையே ஒத்திசைவு மற்றும் விளையாட்டுத் திறன்களை வலுப்படுத்துவதற்காக கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுகொட அவர்களின் எண்ணக் கருவிற்கமைவான 'ஹார்மனி கிரிக்கெட் போட்டி 2020' யை 57 வது படைப்பிரிவின் 572 பிரிகேட்டின் 6 வது இலங்கை சிங்க படையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

செப்டம்பர் மாதம் 12 திகதி விசுவமடு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கிளிநொச்சி பிரதேசத்தின் 25 அணிகளும் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 அணிகளும் பங்கேற்றன.

பங்கேற்ற 28 அணிகளில் விநாயகர் விளையாட்டு கழகம் மற்றும் தர்மபுரம் விளையாட்டு கழகம் ஆகியன இறுதிப் போட்டிக்கு தேர்வாகின. கடும் போட்டிக்குப் பின்னர் தர்மபுரம் விளையாட்டுக் கழகம் ‘ஹார்மனி கிரிக்கெட் போட்டி - 2020’ இன் சாம்பியனானது.

இறுதி நிகழ்வின் பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தளபதி கலந்து கொண்டார். 57 மற்றும் 65 படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துக் கொண்டனர். Authentic Nike Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ