Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd November 2019 12:25:08 Hours

கிளிநொச்சி படையினரால் பொதுமக்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் எண்ணகருவிற்கமைய கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள 176 பொதுமக்களுக்கு படையினரால் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் 2019 நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இடம் பெற்றது.

இந்த திட்டமானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் பட்டாரமுல்ல சுபூதிபுர கண் சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தினரால் இந்த மனிதாபிமான தேவைக்கு உதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வானது கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம் பெற்றதுடன் கண் பரிசோதனை மற்றும் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்புப் படை தளபதி மற்றும் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிருவாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் எச்.எம்.எச்.என் ஹேரத், சிவில் விவகார அலுவலர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரி மற்றும் படையினர்களும் கலந்துகொண்டனர். Running sports | Sneakers