Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2019 14:35:53 Hours

கிளிநொச்சி தளபதியினால் பாதுகாப்பு தொடர்பான விளிப்புணர்வு கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச மாநில மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்கள் பாதுகாப்பு தொடர்பான ஒரு மாநாட்டு நிகழ்வை கடந்த 9 ஆம் திகதி வியாழகிழமை பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டின் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றன. அதன்படி பாதுகாப்புப் படையினரால் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுத்தல், இப்பகுதியில் இயல்புநிலைக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது கலந்துரையாடப்பட்டன.

இந் கலந்துரையாடலில் 39 அதிகாரிகள் கலந்துகொண்டு தற்போது நிலவும் சூழ்நிலை அவர்களின் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள; தொடர்பாக பல கருத்துக்களை வெளிப்படுத்தினர், மேலும் கிளிநொச்சி தளபதி, பாதுகாப்புப் படையினர்களுக்கு முழுமையான ஆதரவை விரிவுபடுத்த அனைத்து பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றி பங்கேற்பாளர்களுக்கும் விளக்கமளித்ததோடு வேண்டுகோளும் விடுத்தார்.

இந் நிகழ்வில் 57 ஆவது படைப் பிரிவின் பிரிகேடியர் ஏ.எஸ் ஹேவாவித்தாரண மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டன.Adidas footwear | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp