Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கிளிநொச்சியில் படையினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 20 – 20 மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டியானது இம் மாதம் (20) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியா கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் வருகை தந்து சிறப்பித்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கு கீழ் இயங்கும் படையணியைச் சேர்ந்த 34 கிரிக்கட் அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றிய இடையில் இறுதிச் சுற்றுப் போட்டிகளிற்கு 8 ஆவது பீரங்கிப் படையணி மற்றும் 20 ஆவது (தொ) விஜயபாகு காலாட் படையணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த இரு படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிச் சுற்றுப் போட்டிகளில் 8 ஆவது பீரங்கிப் படையணியை தோற்கடித்து 20 ஆவது (தொ) விஜயபாகு காலாட் படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இந்த போட்டிகள் அனைத்தும் 9 ஆவது இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரியின் பூரன எற்பாட்டுடன் இடம்பெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் 65 ஆவது படைத் தளபதி, கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best shoes | Air Jordan