Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கிளிநொச்சியில் இடம்பெற்ற தடகள சம்பியன் போட்டிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் மேற்கொள்ளும் தடகள விளையாட்டு போட்டிகள் இம் மாதம் 20 – 21 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த தடகள விளையாட்டு போட்டிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த தடகள போட்டிகளில் 300 படை வீரர்கள் இணைந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்.

இந்த போட்டியில் பங்கு பற்றி வெற்றீயீட்டிய வீர, வீராங்கனைகளுக்கு இந்த இறுதி பரிசளிப்பு நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியான கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி அவர்களினால் வெற்றி கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், மதகுருமார்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்திருந்தனர். Sports News | balerínky