Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2023 07:40:15 Hours

கவிசிகமுவ மாசடைந்த குடிநீர் கிணறுகளை இராணுவப் படையினர் சுத்தம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் 143 வது காலாட் பிரிகேட்டின் முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் குருநாகல் பிரதேசத்தில் உள்ள ரிதீகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட கவிசிகமுவ கிராம சேவை பிரிவில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க குடிநீர் கிணறுகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டன.

மேற்குப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 14 வது காலாட் படைபிரிவின் படையினரால் சமீபத்திய வெள்ளத்தால் மூழ்கி அசுத்தமடைந்துள்ள குடிநீர் கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன.

இப் பகுதியில் உள்ள அந்தந்த குடியிருப்பாளர்களின் பங்களிப்புடன் மூன்று நாட்கள் தொடர்ந்து (27-29 டிசம்பர்) இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.