Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கரப்பந்தாட்டப் போட்டிகளில் 55 ஆவது படைப் பிரிவிற்கு வெற்றி

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப் பிரிவுகள் மற்றும் படையணிகளிலுள்ள அதிகாரிகள் மற்றும் படையினரின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 10 குழுக்களை உள்ளடக்கி இந்த கரப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெற்றன.

மிகவிறுவிறுப்பான முறையில் இறுதிச் சுற்றுப் போட்டியானது 55 ஆவது படைப் பிரிவு மற்றும் 52 ஆவது படைப் பிரிவுகளுக்கு இடையில் இடம்பெற்றது. இப் போட்டிகள் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தில் வெள்ளிக் கிழமை (06) ஆம் திகதி இடம்பெற்றது. இப் போட்டிகளில் சிறந்த போட்டியாளரிற்கான விருதை 1 ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த சாதாரண படைவீர்ர் எச் பி ஜயசேன பெற்றுக் கொண்டதுடன், சிறந்த பந்து மாற்றாளராக சாதாரண படைவீரர் பி யு யு குணசேகர அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் கலந்து கொண்டதுடன் வெற்றியடைந்த போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி வைத்து கௌரவித்தார். மேலும் இந்த நிகழ்வில் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, வடக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி, படைப் பிரிவுகளின் தளபதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Asics footwear | New Releases Nike