Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2020 15:43:08 Hours

கத்தோலிக்க பாதிரியார்கள் கொவிட் 19 கட்டுப்பாட்டுப் பணிகளின் மீதான பரந்த பார்வை

நாடளாவிய 40 கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் வெளிநாட்டு சபைகளின் பாதிரியார்கள் பங்கு பற்றிய முக்கிய மத மாநாட்டு வெள்ளிக்கிழமை 10ம் திகதி SEDEC பொரள்ளையில் இடம்பெற்றது. இதன் போது கொவிட் 19 கட்டுப்படுத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஆற்றிய முழுமையான வகிப்பாங்கை விவரிக்கப்பட்டது.

பாதுகாப்புத் பிரதானியும் இராணுவத் தளபதியும் கோவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சார்பாக இராணுவ தலைமையகத்தின் இராணுவ ஊடக பேச்சாளரும் ஊடக பணிப்பாளருமான பிரிகேடியர் சந்தனா விக்ரமசிங்க அவர்கள் முன்னேற்ற படிமுறைகள், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் பணியை இராணுவத்தினருக்கு ஒப்படைத்த விதம் தொடர்பான கண்ணோட்டத்தை வழங்கினார்.

தொற்றுநோயால் நாடு பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து குருமார்கள் பங்குபற்றுகின்றமையால் நாட்டின் பல்வேறு துறைகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு திருப்திகரமான நிலையை அடைய முடிந்தமை தொடர்பாக பங்கேற்பாளர்களுக்கு சிறந்த விளக்கத்தை வழங்கும் நோக்கில் பிரதம மத ஒத்துழைப்பு மாநாட்டின் தலைவர் வணக்கத்திற்குரிய அருட் தந்தை டிலான் பெர்னாண்டோ அவர்களினால் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. Sneakers Store | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret