12th April 2021 21:00:18 Hours
தங்களது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியற் கல்லூரியின் நாற்பத்தொரு பயிலிளவல் அதிகாரிகள் குழு வியாழக்கிழமை (08) தியதலாவ இலங்கை இராணுவ கலவியற் கல்லூரிக்கு மூன்று அதிகாரிகளுடன் விஜயம் மேற்கொண்டனர்.
பாதுகாப்பு கல்வி பாடத்திட்டத்தில் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த ‘களப் பயணம்’ இராணுவ பயிலிளவல் அதிகாரிகளுக்கு பல்வேறு அமைப்புகள் இடையிலான தொடர்பு வலையமைப்பு செய்யவும், அவர்களின் கற்றல் மற்றும் சமூக வளர்ச்சியை வளப்படுத்தவும் உதவியது. அவர்களின் வருகையின் போது சிரேஸ்ட பயிலிளவல் அதிகாரிகளினால் அவர்கள் கல்வியற் கல்லூரிக்கு அன்புடன் வரவேற்கப்பட்டனர். மேலும் “அமைதிக்கான நினைவுத்தூபி” மற்றும் அணிநடை மைதானம்’ ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இராணுவ கல்வியற் கல்லூரி பற்றிய விரிவான விளக்கக்காட்சியை சீன-லங்கா நட்பு கேட்போர் கூடத்தில் பயிலிளவல் அதிகாரிகள் கிளையின் கட்டளை அதிகாரி- கர்ணல் காஞ்சன வீரசேகர அவர்களால் முன்வைக்கப்பட்டது. பின்னர், லாபீர் கேட்போர் கூடம், நவீன வகுப்பறைகள், மொழி ஆய்வகம் மற்றும் நூலகம் போன்ற பயிலிளவல் அதிகாரிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சி வசதிகளை பார்வையிட்டனர்.
கடற்படை மற்றும் இராணுவ இளைஞர்களுக்கு மதிய உணவு பயிலிளவல் அதிகாரி உணவறையில் செய்யப்பட்டிருந்த அதே வேளை அங்கு அவர்களுக்கு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.
இராணுவ கல்வியற் கல்லூரி அதிகாரிகள் மற்றும் பயிலிளவல் அதிகாரிகளிடன் ஜிம்னாசியத்தில் நட்புறவு கூடைப்பந்து போட்டி அவர்களின் கள சுற்றுப்பயணத்திற்கு ஒரு அழியாத அனுபவத்தை சேர்த்தது. Best jordan Sneakers | adidas Yeezy Boost 700 , Ietp