Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2021 16:10:04 Hours

கடந்த 24 மணி நேரத்தில் 2436 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளது

இன்று காலை (17) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,436 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் என்பதுடன் அவர்களில் ஒருவர் வெளிநாட்டவர்கள். ஏனைய 2,419 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமான 561 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 516 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 156 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 1,186 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (17) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 230,691 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் , 133,061 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.

இன்று (17) காலை 0600 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 1,667 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர். கடந்த 24 மணித்தியாலங்களில் மரணங்கள் எவையும் பதிவாகவில்லை எனினும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்குள் 59 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 28 பெண்களும் 31 ஆண்களும் அடங்குவர்.

இன்று (17) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 72 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8,052 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (17) காலை வரையான காலப்பகுதியில்(கடந்த 24 மணி நேரத்தில்) 23 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 529 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.

இன்று (17) நிலவரப்படி இந்த ஊடக செய்தியை வெளியிடும் நேரத்தில், முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 258 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைபடுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்தில் உள்ள பன்னல பொலிஸ் பிரிவுடனான 93 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன., நடைமுறையில் உள்ள பயணத்தடையானது மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கும்.