Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2020 13:44:53 Hours

கஜபா படையினரால் இரத்த தானம் வழங்கல்

அனுராதபுர பொது வைத்தியசாலையின் தேசிய இரத்த மாற்றம் சேவையின் வேண்டுகோளுக்கிணங்க ,புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் தொடர்ச்சியான நோய்கள், தலசீமியா மற்றும் பிரசவம் ஆகியவற்றின் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்குடன் 200 இற்க்கும் மேற்பட்ட கஜபா படையணியின் படையினரால் 16 ஆம் திகதி இரத்த தானம் வழங்கப்பட்டன.

சாலியபுரவில் மேற்கொள்ளப்பட்ட இரத்த தான நிகழ்வில் கஜபா படையணியின் படைத் தளபதியும், பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அந்த இடத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு நன்கொடையாளர்களை ஊக்கப்படுத்தியதுடன் மருத்துவ ஊழியர்கள் மற்றும் அனைத்து படையினர்களுடன் ஒரு சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த திட்டமானது கஜபா படையணி தலைமையகத்தின் மத்திய படைத் தளபதி அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் அனுராதபுர பொது வைத்தியசாலை இரத்த வங்கியின் ஆலோசகர் வைத்தியர் ஹன்சக ராமநாயக மற்றும் அவரது ஊழியர்கள் இந்த மனிதாபிமான திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கினர். அத்துடன், கஜபா படையணி தலைமையகத்தின் மத்திய படைத் தளபதி பிரிகேடியர் மஹிந்த ராஜபக்ஷ, பதவி நிலை அதிகாரிகள், மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். Running sport media | Nike News