26th May 2023 11:06:11 Hours
கஜபா படையணி தலைமையகம் தனது இரண்டாவது காலாண்டுக்கான அதிகாரிகள் பயிற்சி தினத்தை மே 26 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் 100க்கும் மேற்பட்ட கஜபா படையணியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடாத்தியது.
கஜபா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்டிடபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் உரையுடன் இச் செயலமர்வு ஆரம்பமானது. பயிற்சி விரிவுரையானது பொழுதுபோக்கான நிகழ்ச்சிகள் மற்றும் இரவு உணவுடன் முடிவடைந்தது.
ஊடக பணிப்பக கேணல் ஊடகம் கேணல் ஏஎம்டிபி அதிகாரி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, மேஜர் டிபீஎஸ்எஸ் கருணாரத்ன பீஎஸ்சி மற்றும் மேஜர் எல்டபிள்யூஏஎம்சிபீ லன்சக்கார பீஎஸ்சி ஆகியோர் முறையே 'இலங்கையின் தந்திரோபாய சந்திப்புகளில் ஊடகங்களை எவ்வாறு ஈடுபடுத்துவது', சக்தியும் ஆயுதமும் மற்றும் இலங்கை இராணுவத்தின் முகாமைத்துவ முறைமை என்ற தலைப்புகளில் செயலமர்வை நடத்தினர்.
இப் பயிற்சி அமர்வு அதிகாரிகளின் உணவகத்தில் நடைபெற்றது, 612 வது காலாட் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் எம்டபிள்யூஎஸ் மில்லகல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 'ஆபத்து மற்றும் நிச்சயமற்ற தன்மை, சுய-நிச்சயமற்ற தன்மை, மற்றும் அமைப்பு பற்றிய விரிவுரையை நடத்தினார்.