03rd September 2020 10:58:51 Hours
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜாலிய சேனாரத்ன அவர்களுக்கு இம் மாதம் (02) ஆம் திகதி பல்லேகலையில் அமைந்துள்ள தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு 10 ஆவது கஜபா படையணியினால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்களினால் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்விலும் இணைந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Nike Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ