Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st October 2019 11:24:05 Hours

ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் உயரதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் D.A.R ரணவக அவர்கள் இலங்கை இராணுவ சேவையில் நீண்ட நாட்களாக சேவை புரிந்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் இச்சமயத்தில் இம் மாதம் (29) ஆம் திகதி பகல் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இராணுவ தளபதியை சந்திக்க வந்த இந்த மூத்த அதிகாரியை இராணுவ தளபதி வரவேற்று இவரது சேவையை கௌரவித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இராணுவ தளபதியவர்கள் இந்த மூத்த அதிகாரியுடன் உரையாடல்களையும் மேற்கொண்டு இறுதியில் நினைவு பரிசொன்றையும் வழங்கி கௌரவித்தார்.

மேஜர் ஜெனரல் D.A.R ரணவக தற்பொழுது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sports | adidas