02nd June 2023 23:50:12 Hours
ஓய்வு பெறும் வடமத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஈபீ வீரசிங்க வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர், 24 மே 2023 அன்று கல்குளம் 3 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணிக்கு விஜயம் செய்தார்.
கட்டளை அதிகாரி மேஜர் எம்டீஎஸ்யூகே வீரசிங்க யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் மேஜர் ஜெனரல் எம்ஈபீ வீரசிங்க வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களை மரியாதையுடன் வரவேற்றார்.
அதன் பின்னர், அவரது உத்தியோகபூர்வ விஜயத்தை குறிக்கும் வகையில் குழுப்படம் எடுக்கப்பட்டதுடன், மரக்கன்றினையும் நாட்டி வைத்தார். பின்னர் வடமத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் தளபதி படையினருக்கு உரையாற்றினார்.
முகாமில் இருந்து அவர் புறப்படுவதற்கு முன், வடமத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் தளபதி 3 வது இராணுவ பொலிஸ் படையணியின் அதிதி பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பதிவிட்டார்.