18th May 2020 23:40:23 Hours
சேவையில் ஓய்வுபெற்றுச் செல்லும் சிங்க படையணி தலைமையகத்தின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ கலாட் படை பணியகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக அவர்களுக்கு (15) ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் பிரிய விடை நிகழ்வு இடம் பெற்றது. ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக்க அவர்களை இலங்கை சிங்க படையணி தலைமையக படைத் தளபதி பிரிகேடியர் அஜித் பல்லேவல அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து உயிர்நீத்த போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அன்றைய நிகழ்வில், ஓய்வுபெற்று செல்லும் மேஜர் ஜெனரல் மனோஜ் முதன் நாயக்க அவர்கள் ஆணையதிகாரமற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துக் கொண்டார். அங்கு கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் முதன்நாயக்க மற்றும் சிங்க படையணி தலைமையகத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி பிரியாமலி முதன்நாயக்க சிறப்பு மதிய உணவு போசனத்தில் விருந்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிங்க படையணி தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியர்களும் கலந்துகொண்டனர். affiliate link trace | Air Jordan Release Dates 2020