Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th July 2021 11:23:26 Hours

ஓய்வு பெறும் இலங்கை இராணுவ பொலிஸ் படை அதிகாரிக்கு தளபதியின் வாழ்த்து

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்பாக வழங்கல் தளபதி மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையின் படைத் தளபதியாவிருந்த மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை (26) சந்தித்திருந்ததோடு சேவைக்கான பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டார்.

இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவ பொலிஸ் படையணியின் வளர்ச்சிக்கு மேஜர் ஜெனரல் பிரேமலாலின் உறுதியான பங்களிப்பு மற்றும் முன்னரங்கு பராமரிப்பு பிரதேசம் தளபதி, வழங்கல் தளபதி போன்ற அவரது மாறுபட்ட பாத்திரங்களைப் பற்றி கருத்துரைத்தார். மேலும் ஓய்வு பெற்றவுடன் அவரது எதிர்கால முயற்சிகள் குறித்தும் விசாரித்தார். மேஜர் ஜெனரல் பிரேமலால் தனது பதவிக்காலத்தில், குறிப்பாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணியில் (எஸ்.எல்.சி.எம்.பி) தொழிலாண்மை தரத்தை உயர்த்துவதற்கான பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்.

வெளியேறும் சிரேஸ்ட அதிகாரி தனது தளபதியின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றி நன்றி தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசும் வழங்கினார்.