Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2020 10:46:36 Hours

ஓய்வு பெறும் இராணுவ தலைமையக ஆணைச்சீட்டு உத்தியோகத்தருக்கு கௌரவ மரியாதை

இலங்கை இராணுவத்தில் நீண்டகாலம் சேவையாற்றி பின் இராணுவ தலைமையக பிரதான ஆணைச்சீட்டு உத்தியோகத்தராக பணி புரிந்து ஓய்வுபெற்று செல்லவிருக்கும் முதலாம் தர ஆணைச்சீட்டு உத்தியோகத்தரான எல்.எச்.பி.டீ சரத் குமார அவர்கள் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் (27) ஆம் திகதி சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் பிரதான முதலாம் தர ஆணைச்சீட்டு உத்தியோகத்தருக்கு இராணுவத்தில் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்கு பாராட்டுக்களை தெரிவித்து இவரது இராணுவ சேவையை கௌரவித்து இராணுவ தளபதி அவர்கள் நினைவுச் சின்னமொன்றை பரிசாக வழங்கி வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த முதலாம் தர ஆணைச்சீட்டு உத்தியோகத்தரால் இராணுவ தளபதிக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. Nike Sneakers | Klær Nike