21st July 2021 10:24:59 Hours
65 வது படைப்பிரிவின் தளபதியாகவிருந்து ஓய்வுபெறும் இலங்கை பீரங்கி படையின் பெருமைமிக்க வீரர்களுள் ஒருவரான, மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க, இராணுவத்தில் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற தினத்தன்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் திங்களன்று (19) இராணுவ தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்து அவரது மூன்று தசாப்தகால சேவை மற்றும் இராணுவத்திற்காக செய்த அர்ப்பணிப்பான சேவைகளுக்காக பாராட்டினார்.
குறித்த சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்ததுடன், இராணுவத்திலும் பீரங்கிப் படையிலும் அவர் வகித்த முக்கியமான சில நியமனங்களின் போதான சேவைகளையும் நினைவு கூர்ந்தார்.
இதன்போது ஓய்வுபெரும் அதிகாரியால் நினைவுகளை பகிர்ந்துகொண்டதையிட்டும் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இராணுவ தளபதியிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புக்களுக்கும் இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, சந்திப்பின் நிறைவம்சமாக ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரியை பாராட்டும் விதமாக இராணுவ தளபதியினால் சிறப்பு நினைவு பரிசு வழங்கி வைக்கப்பட்டது.