Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st April 2021 18:43:46 Hours

ஓய்வுபெற்றுச் செல்லும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு மரியாதை

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும், இலங்கை இலேசாயுத காலாட் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ ஓய்வுபெற்றுச் செல்வதையிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு திங்கட்கிழமை (19) இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தில் மூன்று தசாப்தகால சேவையாற்றியுள்ள அவர் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வளாகத்திற்கு வருகை தந்த போது அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து அணிவகுப்பு மைதானத்தில் பாதுகாவலர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ அனைத்து நிலைகளுக்குமான உரையொன்றினை நிகழத்தியதுடன், பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக இருந்த காலத்தில் ஒத்துழைப்புகளை வழங்கிய சகலருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

இறுதியாக அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தின் நிறைவில் விடுகை மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 14 மற்றும் 61 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் பங்கேற்றனர்.