Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th April 2024 19:15:57 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் ஆர்ஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலான செவையின் பின்னர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் 16 ஏப்ரல் 2024 அன்று இராணுவத் தளபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

சுமூகமான சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்த பொறுப்புகளை தவறாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையுடன் செயலாற்றியமைக்கு தனது பாராட்டுக்களைதெரிவித்தார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதியின் போது விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் கடமைகளை அவர் நினைவு கூர்ந்தார், அத்துடன் போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் அவர் தனது கடமைகளை திறம்பட நிறைவேற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

பதிலுக்கு, மேஜர் ஜெனரல் ஆர்ஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், பல்வேறு கடமைகளைச் செய்வதற்கு அவருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி, நாட்டை பாதுகாக்கும் அவரது பணிக்காலம் முழுவதிலும், குறிப்பாக சவாலான காலகட்டங்களில், வீட்டிலிருந்து சிரேஷ்ட அதிகாரிக்கு குடும்பத்தினர் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் பாராட்டினார்.

சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்திற்கு விசேட பரிசும் வழங்கப்பட்டது.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விபரம்

மேஜர் ஜெனரல் ஆர்ஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 1989 ஜூலை 14 ஆம் திகதி இலங்கை இராணுவ நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி 32 இல் இராணுவப் பயிற்சியை முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன்னாக 1991 ஜனவரி 19 இல் இலங்கை பீரங்கி படையணியில் நியமிக்கப்பட்டார். அவரது வாழ்க்கை முழுவதும், அவர் பல்வேறு நியமனங்களை வகித்தடன் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார், இறுதியில் 10 ஓக்டோபர் 2022 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது அவர் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகித்தார் .7 வது இலங்கை பீரங்கி படையணியின் படைத் கட்டளையாளர் மற்றும் பேட்டரி கட்டளையாளர், பணி நிலை கெப்டன் (நிர்வாகம்) மற்றும் தியத்தலாவ தலைமையகத்தின் பிரிகேட் மேஜர், 10 வது இலங்கை பீரங்கி படையணியின் தலைமையக பேட்டரியின் பேட்டரி தளபதி, 4 வது இலங்கை பீரங்கி படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, மேற்கு சஹாராவில் ஐநா பணியின் பணிக்குழுவின் இராணுவ கண்காணிப்பாளர்,7 வது அதிரடி படையின் பொதுபணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்) மற்றும் வழங்கல்,14 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி, படையணி தலைமையக பணிநிலை அதிகாரி 1(வழங்கல்), 55 வது காலாட் படைப்பிரிவு கேணல் பொதுப்பணி, 573 வது காலாட் பிரிகேட் தளபதி, படையணி பிரதி நிலைய தளபதி மற்றும் 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண சுர பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி, படைப்பிரிவு தளபதிகளின் தந்திரோபாய பாடநெறி, படையலகு நிர்வாக பாடநெறி, அதிகாரிகளின் சிறப்புப் பாடநெறி, கனிஷ்ட கட்டளை அதிகாரி பாடநெறி, சாத்தியமான கண்காணிப்பாளர்கள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, பொது தகவல் தொழில்நுட்ப திறன் பாடநெறி, தேசிய பாதுகாப்பு பாடநெறி, பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி - இந்தியா, அதிகாரிகளின் பீரங்கி திசைமுகப்படுத்தல் பாடநெறி - பாகிஸ்தான், படையணி சமிஞ்சை அதிகாரிகளின் பாடநெறி - இந்தியா, உயர் பீரங்கி பாடநெறி - இந்தியா, கூட்டு நடவடிக்கை பணிநிலை அதிகாரிகள் பாடநெறி - சீனா மற்றும் பீரங்கி படையலகு கட்டளை அதிகாரி பாடநெறி – சீனா போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பயின்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலை அறிவியல் மற்றும் இராணுவம் அல்லாத பல உயர்கல்விகளையும் பயின்றுள்ளார்.