Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2021 16:53:15 Hours

ஓய்வுபெறும் பொறியியல் சேவை பணிப்பாளரின் அர்பணிப்பான சேவைக்கு தளபதி பாராட்டு

இராணுவத்தில் 30 வருடகால சேவையை பூர்த்தி செய்துக்கொண்டு சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதியும் பொறியியல் சேவை படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரத்னசிறி கணேகொட அவர்களை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புதன்கிழமை (8) இராணுவ தலைமையகத்திலுள்ள அவரது அலுவலகத்திற்கு அழைப்பித்து பாராட்டினார்.

இலங்கை பொறியாளர் சேவைகள் படையணியின் முன்மாதிரியான சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கணேகொட , இராணுவத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றுகையில் பல முக்கியமான நியமனங்களை வகித்துள்ளார். அதேபோல் அவருக்கு பொறியியல் சேவை சார்ந்த திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 21 ஜூலை 1987 இல் இராணுவத்தில் இணைந்துகொண்ட அவர் 10 செப்டம்பர் 2021 இல் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் கணேகொட ஆகியோருடைய சந்திப்பின் போது நிறுவனத்திற்குள்ளும் பிற இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பொறியியல் சேவைகளின் போதான அவரது சிறப்பான அர்ப்பணிப்புகளைப் பாராட்டினார். அதனையடுத்து தளபதி, அவரது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். குறித்த சிரேஸ்ட அதிகாரி முல்லைத்தீவு முன்னரங்கு பகுதிகளின் தளபதியாக நியமிக்கப்படும் முன்பாக பல முக்கிய நியமனங்களை வகித்திருந்தை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இராணுவ தளபதியிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கும் ஆலோசணைகளுக்கும் நன்றி தெரிவித்த ஓய்வுபெறும் அதிகாரிக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.